For Your Quick Access

Wednesday 30 December 2009

Uravugal


பயணம் - PAYANAM


Saturday 12 December 2009

THE SIZE OF ONE TONNE CO2

ஒரு டன் CO2 இவ்வளவு பெரிசா?




Thanks : wind power works

Wednesday 9 December 2009

உன் கையில்


இடை...



இஎன்னுடைய எழுதும் திறனை சோதனை செய்ய விரும்பிய் என் தோழர் காண்பிக்க நான் எழுதிய் சில வரிகள்

Thursday 3 December 2009

என் தாயே!


Wednesday 2 December 2009

திட்டங்களனைத்தும்


Tuesday 1 December 2009

அடிமைகள்


Wednesday 4 November 2009

பயணம்


Saturday 15 August 2009

'சு' தந்திரம்


Tuesday 11 August 2009

துறவு - ஆசை


Monday 10 August 2009

அன்பும் நட்பும்...


Sunday 19 July 2009

22nd July Predication- Solar Eclipse & Eclipse Quake !!!







THANKS : NASA & MR.N.R.P

Monday 22 June 2009

சுகாதாரமான குடிநீர்?! இப்படிக்கு - சென்னை மாநகராட்சி




நன்றி "தினகரன் மற்றும் இந்நிகழ்வை பகிர்ந்து கொண்ட தோழருக்கு"

Monday 15 June 2009

Climate Change: There is a solution... Pass it on!



The global wind energy industry has launched a new public awareness campaign called "Wind Power Works. Pass it on" which aims to catalyze wide spread support for wind energy and call on policy makers to commit to significant carbon emissions reductions to combat climate change.

As the countdown to Copenhagen continues and fears grow that the Climate Summit will not make the deep cuts in carbon emissions required, the new campaign sounds a more positive note.

Launched on the Global Wind Day (15 June), the campaign urges people all round the world to generate the power of change and to send a message to world leaders that they can make the deep cuts needed and still power the world.

The 'Wind Power Works. Pass it on' campaign involves downloading a virtual wind turbine onto users' desktops to show their support for wind energy and deep emissions cuts. These turbines will demonstrate how many homes can be powered and how much CO2 can be saved through wind energy.
The more wind turbines downloaded, the stronger the call to world leaders to agree the reductions necessary to avert climate change and to make wind energy part of the solution.

Steve Sawyer, Secretary General of the Global Wind Energy Council (GWEC) said, "We have the technology to transform the global energy system, and we can do so rapidly. That's an important message for our leaders to hear so that they commit to making the cuts so desperately required, and we want it delivered in the strongest terms possible."

Wind power is the only clean technology which is ready now and which can be immediately and rapidly deployed virtually anywhere in the world. It is already the fastest growing new generation source both in Europe and the US, and has the capacity to provide up to 12% of the world's energy needs by 2020, saving over 10 billion tons of CO2 in the process.

The campaign wind turbine game can be downloaded at www.windpowerworks.net/passiton, which also houses a short video and campaign material. The campaign is also supported on Facebook and Twitter and encourages people to start their own virtual wind farms or join existing ones and to pass the idea on. All campaign material will be available in English, French, Spanish and Chinese.

Do visit here

Saturday 6 June 2009

Learn English - Learn Road Safety...[Kids Special]




I would like to share this links with you not just because we can learn new language through that... we can also learn some concepts forever...

A must visit site not only for kids... it for EX kids also...

Song on Road Safety

Play Road safety game


குழந்தைகளுக்கு முக்கியமுனு போட்டுருக்குனு பார்க்காம விட்டுடாதீங்க...
நானும் ஒரு காலத்துல குழந்ததானு அடம்பிடிச்சு பாத்திடுங்க...

அப்புறம் மத்தவங்களையும் அடிக்கடி பார்க்க சொல்லுங்க இந்த (குழந்தைகள் ஸ்பெசல்) தளத்தை...

Monday 25 May 2009

வணக்கம்...



MAY BE AVAILABLE AT

http://oliyinpayanam.wordpress.com

Friday 22 May 2009

இது பிளேன் கேட் (அட! இரயில்வே கேட் மாதிரி...)

நம்ம ஊருல..... இரயில்வே கேட்ட பார்த்திருக்கோம்...
இரயில் போகும் வரை காத்திருக்கும் வாகனங்களை பார்த்திருக்கோம்...

ஆனா... இந்த உலகத்தில ஒரு இடத்தில (Gibraltar) பிளேன் வருதுனு
கேட்டு போட்டு இருக்காங்க....
பிளேன் போகட்டும் என்று வாகனங்களும் காத்து கிடக்கு....

எப்படித்தான் இப்படி இடத்தில டிராபிக்க மேனேஜ் செய்கிறார்களோ?
நினைச்சாலே கண்ணக்கட்டுது...

நீங்க கண்ணால பாருங்க... உங்களுக்கும் கண்ண கட்டும்....






Thursday 21 May 2009

9 மில்லியன் தங்கத்தேர் (கார்)!!

ஆஆஆஆஆஆஆஆஆஆஆ! (திறந்த வாய கொஞ்சம் மூடுங்க!)


நம்ம ஊர்ல தங்கத்தேர் விடுவோம்... இவங்க தங்க காரே விடுறாங்க...


தங்கத்தோட விலை ஏ கூடுதுனு இப்ப தெரியுதா?

பொருளாதார சரிவு எல்லாம் கீழ் தட்டு மக்களுக்குதான்...
(இந்த காரை எந்த கீழ் தட்டு குடிமகனும் வாங்க மாட்டானு நினைக்கிறேன்)

சரி கொஞ்சம் தண்ணீய ஊத்தி எரிகிற நெருப்ப அணைங்க...













===========================================================
Thanks : fropki.com

Sunday 17 May 2009

அலை... அலையாய்...-2

அலைகளை கண்டு
இரசித்ததுண்டு...
அஞ்சியதுண்டு...
அதிசயித்ததுண்டு...
பிரமித்ததுண்டு...
மனதுக்கு உவமையாக்கியதுண்டு...
அழித்த போது அழுததுண்டு...
அவமரியாதை செய்ததுண்டு...
எத்தனை செய்தாலும்...
இன்னொருமுறை
பார்க்கும் போது...
மனதை அலைபாய
செய்ய தவறியதில்லை...
இந்த அலைகள்!


அலைகளை படம் பிடிப்பதையே தனது வாழ்வின் இலட்சியமாய் கொண்டிருக்கும் "கிளர்க் லிட்டில்" அவர்களின் புகைப்படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள மனம் அலை பாய்ந்ததால்தான் இங்கு இதனை கிறுக்கி கொண்டிருக்கிறேன்...

சரி... நீங்களும் உங்கள் மனதை அலை பாய விடுங்கள்....






அலை... அலையாய்... -1

அலைகளை கண்டு
இரசித்ததுண்டு...
அஞ்சியதுண்டு...
அதிசயித்ததுண்டு...
பிரமித்ததுண்டு...
மனதுக்கு உவமையாக்கியதுண்டு...
அழித்த போது அழுததுண்டு...
அவமரியாதை செய்ததுண்டு...
எத்தனை செய்தாலும்...
இன்னொருமுறை
பார்க்கும் போது...
மனதை அலைபாய
செய்ய தவறியதில்லை...
இந்த அலைகள்!


அலைகளை படம் பிடிப்பதையே தனது வாழ்வின் இலட்சியமாய் கொண்டிருக்கும் "கிளர்க் லிட்டில்" அவர்களின் புகைப்படங்களை
உங்களுடன் பகிர்ந்து கொள்ள மனம் அலை பாய்ந்ததால்தான் இங்கு இதனை கிறுக்கி கொண்டிருக்கிறேன்...

சரி... நீங்களும் உங்கள் மனதை அலை பாய விடுங்கள்....






Thursday 14 May 2009

[நம்மை] உயிரோடு தோலுரித்தால்.... [மன பலமுள்ளவர்கள் மட்டும்]

சமீபத்தில் "தோலால் செய்தவைகள் தான் வேண்டும் என அடம் பிடிப்பவரா நீங்கள்?" என்ற கேள்வியோடு தோல் ஆடைகள் ஆபரணங்கள் செய்ய என நடக்கும் கொடுமைகள் பற்றி நான் உங்களுடன் சில படங்களை மட்டும் பகிர்ந்து கொண்டேன். அதற்காக எனக்கு இமெயில் மூலம் கருத்து கூறியிருந்த அனைவருக்கும் எனது நன்றிகள்.

இதல்லாம் பார்க்கும் போது... நாமும் மாறிடலாமுனு நினைக்கிறேன்... ஆனா கொஞ்சம் யோசிச்சா? இதலாம் முடியாதுனு நினைக்கிறேன்.. என்று நடுவில் நின்று கொண்டு தவிப்பவர்களாகக் கூட இருக்கலாம் நீங்கள்... ஆனால் இதை பார்த்த பிறகு நீங்கள் கட்டாயம் ஒரு முடிவுக்கு வருவீர்கள் என நம்புகிறேன்.

நண்பர்களுடன் உரையாடும் பொழுதெல்லாம் நக்கலாக நாங்கள் சொல்லிக்கொள்வதுண்டு "இன்னைக்கு இருக்கிற நிலைமையில நல்ல விசயங்களை கூட கொஞ்சம் மசாலா தடவி... சுவாரசியம் ஏத்தி சொன்னாத்தான் நாளு பேரு பேருக்காகவாவது கேட்பான் என்று..." அது உண்மைதானோ என சந்தேகத்தை கிளப்பிவிட்டு செல்லும் பல செயல்கள் நாள்தோறும் நம் வாழ்விலேயே நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன.

தேவைகளுக்காகத்தான் என சொல்லி சொல்லி... எத்தனையோ செய்தாகிவிட்டது...
இது உலகத்தின் நியதி என தத்துவம் பேசுபவர்களை கண்டால் எனக்கு இன்னும் பயம் அதிகரிக்கிறது...
ஆறாவது அறிவு இருக்கிறது என மெச்சி கொள்ளும் சமயத்தில்... அந்த அறிவு அழிவுக்குதானா? என நினைக்கும் போது உள்ளம் நடுங்குகிறது.

அமெரிக்காவில் விற்கப்படும் 50% மோலான "ஃப்ர் கார்மண்ட்ஸ்" [Fur Garments] சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. அதற்காக பல தடிமனான ரோமத்துடன் கூடிய உயிரினங்கள் உயிருடன் தோலுரிக்கப்படுவதை "பீட்டா" [PETA] அமைப்பு வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது... இது குறித்து விளக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை....

இக்கொடுமையை தடுக்க நம்மால் ஆன உதவியை செய்வோம்...

பலரிடம் இச்செய்தியை கொண்டு சேர்ப்பதும்... தோலால் செய்யப்பட்டவைகளை தவிர்ப்பதும்... முடிந்தவரை உடன் இருப்பவர்களை குறைத்து கொள்ளும்படி வேண்டுவதும்... மனிதன் மட்டுமே வாழ்வதற்காக அல்ல இந்த வையகம் என்பதை உணர்ந்த வாழ்க்கை வாழ துவங்குவதும்... அவற்றிற்கு அடிகோலும் என நம்புகிறேன்....

இதோ.... அந்த கொடூரம்.... [மன வலிமை படைத்தவர்கள் மட்டும் பார்க்கவும்...]



Pledge to go fur-free at PETA.org.


இதற்கு ஏதேனும் செய்தே ஆக வேண்டுமென துடிக்கிறீர்களா?

கீழ்காணும் செய்தியை கொண்டு இமெயில் மூலம் உங்களுக்கு தெரிந்த நண்பர்களிடம் கையொப்பங்களை சேகரியுங்கள், 500 கையொப்பங்கள் வந்ததும்.... PETA2@peta.org என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்...

Please sign, don't watch video its just too painful but we have to try and stop this brutality. It's about animal rights. But if you must watch there is a link below.

I explain the process below:
With a hidden camera, animals were filmed being
SKINNED ALIVE!!! They say it's done to get a more
perfect ''cut''.afterwards the carcasses
are tossed into a pile, still alive, and
for up to 10 minutes you can see their hearts still
beating, in agony, their eyes still blinking, and the puppies little
paws still shaking.
There was one pup, that still lifted his head and
gazed at the camera with bloodied eyes . If
you don't care to see the video, please sign and
forward to your friends:
this monstrosity has to be stopped, we have to act!!
Please scroll down and add your signature to the petition and send to
everyone in your address book. Do not click on the link, you have been warned
that it is too gruesome to watch and something needs to done to stop it...
Thanks for your support

There is no need to see the video, but if you must, be aware,
it's horrible. The following video is of excruciating violence. It's
painful silence affects us all deeply. If we don't protect animals from
this type of brutality, we become accomplices
http://www.peta.org/feat/ChineseFurFarms/index.asp



When the list reaches 500 names, please forward to:
PETA2@peta.org
Thank you .

பீட்டா மற்றும் இச்செய்திகள் பற்றி மேலும் அறிந்து கொள்ள.... [To Read In English...]

http://www.peta.org/feat/ChineseFurFarms/index.asp


நன்றிகளுடன்
கருவெளி ராச.மகேந்திரன்

Tuesday 12 May 2009

ஓட்டு போடலையோ! ஓட்டு!!

என்ன நடந்தாலும் பரவாயில்லை... ஓட்டு போட மறந்திடாதீங்க...




இத படிக்காதீங்க....(ஓட்டு போடுறதுனு முடிவு செஞ்சாலும் செய்யாட்டியும்...)

இந்த வருசமும் என் ஓட்டு போச்சு என்று புலம்பி கொண்டிருந்தவனையும் மிஞ்சும் அளவுக்கு புலம்பினான் இன்னொருவன்... உனக்கு பரவாயில்ல... ஓட்ட "சுவாஹா" பண்ணி உன்னை காப்பத்திட்டாங்க... எங்க நிலைமைய பாரு... நடக்குற கொடுமையெல்லாம் பார்த்துட்டு எந்த பொணந்திண்ணிக்கு ஓட்டு போடுறதுனு தெரியாம தவிச்சு கிட்டு இருக்கோம்.

இப்பத்தான் மொதமொத ஓட்டு போட வாய்ப்பு வந்திருக்கு... ஆனா இங்கே யாருக்கு ஓட்டு போட்டும் மக்களுக்கு பயனில்லை... ஓட்டு வாங்குறவ குடும்பத்து பிள்ளைகளுக்குதான் பயன் என்பது தெளிவா தெரிஞ்ச பிறகு ஓட்டு உரிமை மட்டும் எதுக்குனு தோணுது அண்ணே...

அந்த கொடுமைய விடுப்பா... அரை மணி நேரத்தில மூணு தடவ... தாங்க செஞ்சதா... தம்பட்டம் போடுற விளம்பரங்களின் கொடுமை தாங்கலப்பா... என்றபடி ஓடி வருகிறார் வீட்டில் டி.வி. பெட்டியை பார்த்து கொண்டிருந்தவர்.

ஓசியில... டி.வி வாங்குறப்ப யோசிக்கனும்... இப்ப புலம்பி என்ன செய்ய... அண்ணே... எங்க வீட்டுல இருக்கிறது... நான் சம்பாதித்து வாங்கினதுதானே,,,, ஆனா இருக்கிற சேனலெல்லாம் அவங்கது தம்பி... அத மறந்திடாதே!

49-ஓ வை இந்த வருசமாவது ஓட்டு இயந்திரத்திலேயே கொண்டு வந்திருவாங்கனு கனவு கண்டேன்... ஆனா அதுவும் கனவாவே போச்சு... - இது படிச்சுட்டு ஓட்டு போட பயந்திட்டிருந்து... 49-ஓ வை பற்றி கேள்விபட்ட கூட்டத்தின் பிரதிநிதி..

49-ஓ வா? அப்படினா? - இது 99% வாக்குரிமை (மட்டும்) உள்ள குடிமக்கள்....

மொதல்ல ஓட்டுரிமை எதுக்குனு சொல்லுங்க? - வெறுத்து போன பெரிசு...


இந்த குடிமக்களோட புலம்பல் தாங்கமுடியலப்பா....
குடிச்சமா! பிரியாணிய முழுங்கினமா...
சொன்ன படத்து பட்டனை அமுக்கினோமா...
வந்து அடுத்த அஞ்சு வருசத்துக்கு புலம்பினமா...
அடுத்த தடவ இன்னொருத்தனுக்கு பட்டனை அமுக்கினோமானு இல்லாம...
இப்ப எண்ண புதுசா... ஏதேதோ... யோசிச்சுகிட்டு....
போங்கையா.... போயி... ஓட்ட போடுங்க....


Thursday 30 April 2009

சிந்தியுங்கள் என் தமிழ் மக்களே! - பரமேஸ்வரன் [வீடியோ]



தனியே என்னிடம் வார்த்தைகள் ஏதுமில்லை...

Tuesday 28 April 2009

தோலால் செய்தவைகள் தான் வேண்டும் என அடம் பிடிப்பவரா நீங்கள்?[தோல் பை - வீடியோ]

சமீபத்தில் நண்பர் மூலமாக என்னை வந்தடைந்த படங்களை பார்த்ததும் தோன்றிய வரிகளை கருவெளியில் கிறுக்கிய பின்பு... சும்மா இருக்காமல் நான் செய்த சிறு முயற்சி...

நம்மளை மட்டும் சிந்தித்து சிந்தித்து செயல் பட்டு கொண்டே இருந்தோமெனில்... இன்னும் என்னென்ன விபரீதங்கள் நடைபெறுமோ? என்ற அச்சம் என்னை போலவே "உலகம் வெப்பமடைதலை" பற்றி அறிந்தவர்களையும் தொற்றி கொண்டிருக்கும் என்பதில் எனக்கு எந்த வேறுபட்ட கருத்துமில்லை.



தோலால் செய்தவைகள் தான் வேண்டும் என அடம் பிடிப்பவரா நீங்கள்?


எப்போதும் தோல்களால் செய்யப்பட்ட பொருட்கள் வாங்க வேண்டும் என்ற பேரவா கொண்டவரா நீங்கள்?

தோல்களால் செய்யப்பட்ட பொருட்கள் தான் வேண்டும் என அடம் பிடிப்பவரா நீங்கள்?

உயிர் - உணவு சங்கிலி பற்றியெல்லாம் படித்து கிழித்தவரா நீங்கள்?

உயிர் இருந்தாலும் இல்லையென்றாலும் கரப்பான் பூச்சிக்கு அஞ்சி ஓடுபவரா?

அப்படி இருந்தும் தோல் பைகளை தோளில் மாட்டி கொண்டு பந்தா விடுபவரா?

கீழ்காணும் வீடியோவில் வரும் புகைப்படங்களை பாருங்கள்... (வரிகளை படித்த பிறகு) முடிவை நீங்களே தேர்ந்தெடுங்கள்....

(சில விசயங்களை அடுத்தவங்க சொல்லி மாத்த முடியாது...
நம்ம சொல்லியே நாம் மாறுவது கிடையாது என்கிறீர்களா?)



கருவெளியில் நான் எழுதிய சில வரிகள்... உங்களுக்காக...

வினோதமானவர்கள் தான்!


காலணியிலிருந்து...
கைப்பை...
கால் சட்டை...
மேலாடை என
அத்தனையும்
தோலால் செய்திருக்க வேண்டும் என்பர்
இவர்...

கரப்பான் பூச்சிக்கு அஞ்சும்
அக்காவும் தங்கையும்
கொடுமைக்கு சில சமயங்களில்
அன்னையும் கேட்பார்கள்...
லெதர் கேண்ட் பேக் (தோல் கைப்பை)
வேண்டுமென்றே...

பாவம் அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை தான்...
வாயுக்குள் சென்றால்
வெளிவர இயலாத...
மலைப்பாம்புகளும்
அக்கைப்பைக்காக கொல்லப்படுவதை...


ஆசைக்கு...
அழக்குக்கென...
உயிர்களனைத்தையும்
கொண்டு குவித்துவிட்டால்...
அறிவியல் பாடத்திட்டத்தில்...
எனக்கு கற்பித்த உயிர் - உணவு சுழற்சியை
எப்படி சரிசெய்வோம்?

உறங்காத இரவுகள் கொடுத்து
பாடபுத்தகம் கொடுத்து
படிக்க செய்தீர்கள்...

உயிர் சங்கிலியை கெடுத்து...
நாளும் புது புது பாடம்
சொல்லி தருகிறீர்கள்...

நீங்கள் வினோதமானவர்கள்தான்....



வீடியோவையும் பார்த்திட்டு முடிவெடுங்கள்.... நல்ல முடிவா எடுங்க...



இவ்வீடியோவை காணொளி பகுதியில் வெளியிட்ட "அதிகாலை.காம்"க்கு நன்றி

Tuesday 14 April 2009

மாய இலை...


என் தங்கை... இன்று வெளியிட்டுருந்த அரச இலை ஓவியத்தை பார்த்ததும் தோன்றியதுதான் இங்கே உங்களுக்காக... அவரது படைப்புகளில் சில... மேலும் உங்கள் வியப்பை அதிகரிக்க... அவர் வலைக்கே செல்ல இணைப்பையும் கொடுத்துள்ளேன்...


வலை உலகில்...
இலையில் ஓவியம்...
மாயவலை உலகெங்கும் என்றபடி
ஜொலிக்குது... ஒரு இலை...
மாயக்கண்ணாடியாய் ஜொலிக்குது
இன்னொரு இலை...


நீங்க இன்னும் இரசிக்க..

படங்கள் : தங்கைக்கு நன்றி

Monday 13 April 2009

"Appraisal 2009" எத்தனை பேருக்கு இந்த நிலையோ?


இன்று காலை "Appraisal 2009" என்ற தலைப்பில் நண்பர் ஒருவர் அனுப்பி இருந்த இமெயிலுடன் இணைக்கப்பட்டிருந்த படம் இது...

இதற்கு விளக்கம் எதுவும் தேவையில்லை என்று நினைக்கிறேன்...

எங்கதான் தேடி கண்டுபிடிச்சு போட்டோ எடுப்பாங்களோ தெரியல?
இல்ல எப்படித்தான் எதையாவது பார்த்து அதைப் பற்றி இப்படி யோசிப்பாங்களோ தெரியலப்பா?

இப்பவே எனக்கு கண்ணக்கெட்டுது....
அலுவலகம் சென்று வந்ததும் உங்கள் அனுபவத்தையும் கொஞ்சம் சொல்லுங்க...

இப்படித்தான் என் நண்பனுக்கு...(என்னோடனு சொல்ல முடியாவிட்டாலும்...)

Thursday 9 April 2009

போர்கள் எதற்கு?

சமீபத்தில் சில படங்களை பார்த்து கொண்டிருக்கும் பொழுது.. தற்செயலாய் கண்ணில் பட்ட இந்த படங்கள் என்னிடம் ஒரு கேள்வியை எழுப்பியது... அது போர்கள் எதற்கு? என்பதே...













பலவாறு முயன்றும் பதில்கள் கிட்டவில்லை... திடீரென போன வருடம் ராஜஸ்தான் குண்டுவெடிப்பின் போது எழுதிய உணர்வுகள் மனதில் தோன்றவே... அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பி... ஒளியின் பயணத்திற்கு விரைந்தேன்... விளைவு... உங்கள் கண் முன்னே... "போர்கள் எதற்கு?"

இதோ.... "அணுவைப் பிளந்து" என்ற தலைப்பில் நான் கொட்டிய உணர்வுகள்...

அணுவைப்பிளந்து...

எத்தனை பெயர் வேண்டுமானாலும்
வைத்து அழைத்து கொள்ளுங்கள்...


சுதந்திரப்போர்,
உரிமை மீட்பு,
அடிமை ஒழிப்பு,
அடக்குமுறை எதிர்ப்பு,
மண் மீட்பு,
விடுதலைப்போர்,
இறையின் ஆணை,
மண்ணின் மக்களுக்கே,
இன்னும் எதுவாகினும் சரி....
அணு அணுவாய் உடல்களை சிதைத்து,
சாம்பலையும் காற்றில் கரைத்து,
பல உயிர்களை குடித்து..
யார் வாழ்வதற்காக இப்பூமியை தயார் செய்கிறீர்கள்...
என் தோழர்களே?!

நீ இழந்ததாய் நினைக்கும் அனைத்தையும்
அனைவரும் இழந்த பின்புதான்...
நீ ஓய்வாயோ?! சொல்!

அணுவை துளைத்து பெரும் சக்தி கண்டு
நமக்காய் தந்தவரும், அவமானத்தால்
மறுபடியும் மறுபடியும் சாகும் சாபமாய்...
வாழ்கிறாயே உன் வாழ்வை!

பல உயிர்களை குடித்து
யார் வாழ்வதற்காக இப்பூமியை தயார் செய்கிறீர்கள்...
என் தோழர்களே?!


இதை pdf format- ல் நீங்கள் இங்கு மின்னிறக்கம் செய்து கொள்ளலாம்...




யாரும் மிஞ்சிடாத... மீண்டும் உருவாக்கப்பட வேண்டிய பேரழிவுக்குள்ளான மனித வளத்தையும், இயற்கை வளத்தையும் மட்டும் எச்சமாக விட்டு செல்லும் போர் எதற்கு?
இனியாவது சிந்திப்போமா?

Tuesday 7 April 2009

இத பத்து பேருக்கு அனுப்பினால்...

"மகாலெட்சுமி... உங்களுக்கு நற்செய்தியை கொண்டு வருவார்."



இதனை பத்து பேருக்கு அனுப்பினால்... 48 மணி நேரத்திற்குள் உங்களுக்கு ஒரு நற்செய்தி கிட்டும் என்ற செய்தியுடன் வந்த இமெயில் இணைத்திருந்த புகைப்படம் இது. நல்லவேளை மற்ற இமெயில்களில் வருவது போல் அனுப்பாவிட்டால் "......."க்கு நடந்தது போல் உங்களுக்கும் தொடர் துன்பங்கள் வந்து சேரும் என்ற மிரட்டல்கள் இல்லை... ஆகையால் எந்தவித குழப்பமுமின்றி... அனுப்பியவருக்கே பத்து முறை அனுப்பி வைத்து விட்டேன்.

இது போல் சில நாட்களுக்கு முன் வந்த "ஏசு உனக்காகத்தான் உதிரம் சிந்தினார்" "உனக்காகத்தான் உயிர் நீத்தார்" என்ற செய்தியுடன் வந்த ஏசுவின் (உருவங்களின்) புகைப்படத்தொகுப்பும் என்னை மிகவும் அமைதியற்ற நிலைக்கு தள்ளி விட்டன.



முன்பெல்லாம் திருப்பதி,ஏழுமலையான்,மும்பை விநாயகர்,லெட்சுமி... வரிசையில் இப்பொழுது ஏசுவையும் சேர்த்து விட்டார்கள்.


இது போன்ற இமெயில்களின் நோக்கம் தான் என்ன? என்ற கேள்வி எனக்குள் எழுந்து கொண்டே இருந்தது... விடை கிட்டியபாடில்லை.... ஆனால் மேலும் பல கேள்விகள் எழுந்தன...

மதத்தை பரப்பும் ஒரு யுக்தியாக இருக்குமோ?

தெய்வத்திற்கும் விளம்பரம் தேவையோ?

ஒருவர் பயந்து பார்வேர்ட் செய்வதால் பரவுகிறதோ?

ஊடகங்களை எப்படியெல்லாம் பயன்படுத்தலாமுனு யோசிப்பாங்கலோ?

இப்படி கேள்விகள்... அடுக்கடுக்காய் பெருகி கொண்டே போயின... இது போன்றவைகளுக்கு என்ன காரணம் இருக்க முடியும்... அதிகமான நபர்களை இச்செய்தி சென்றடைய வேண்டும் என்பதை தவிர...

இன்றைய விளம்பர உலகில் இது போன்றவைகள் நிகழ்வது தவிர்க்க முடியாதது என்பதை நான் மறுப்பதற்கில்லை... ஆனால் இத்தகைய மிரட்டல்களால் எத்தனை காலம் ஒரு மதமும், தெய்வமும், ஒரு விசயமும் ஒருவரிடம் இருக்க முடியும்.. நல்லவிதமான் மாற்றத்தை ஏற்படுத்தமுடியும்.

அருமையான இயற்கை காட்சியை எனது நட்பு வட்டாரத்திற்கு அனுப்ப எப்போதும் விரும்பும் நான், இது போன்ற இமெயில்களை என்னுடனே நிறுத்தி கொள்வதுண்டு. அப்படியே அனுப்புவதென்றாலும் யார் யார் இத்தகைய விசயங்களில் விருப்பம் உள்ளவர்களே அவர்களுக்கு மட்டுமே (மிரட்டல்களை எல்லாம் எடிட் செய்துவிட்டு) அனுப்பி வைத்து மகிழ்வேன்.


இனியும் தவறான விளம்பரங்களுக்கு பலியாக வேண்டாம். சரியான செய்தியை என்றாலும் தவறான் நபரிடம் கொண்டு சேர்த்தால் தவறாகிப்போகும். அட! இமெயில் பார்வர்ட் செய்வது எவ்வளவு முக்கியமோ? அவ்வளவு முக்கியம் எந்த விசயத்தை, யாருக்கு அனுப்புகிறோம் என்பது....


-------------------------------------------------------------------

விளம்பரங்களின் தாக்கம் பற்றி நான் உங்களுக்கு கூறத்தேவையில்லை... விளம்பரத்திற்கிடையில் படம் / நிகழ்ச்சிகளை டி.வியில் பார்த்து முடிக்கும் நமக்கில்லாத அனுபவமா? என்கிறீர்களா?

"நாளை என் படமே எனக்கு அனுப்பி வைக்கப்படலாம்...."

குறிப்பு :
இந்நிகழ்வு நிகழ காரணமாய் இருந்த இரு தோழர்களின் இமெயிலுக்கும் நன்றி...